×

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 13-ம் தேதி வரை மின் உற்பத்தி நிறுத்தம்

சென்னை: சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 13-ம் தேதி வரை மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையம் இந்தியாவில் தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது. ‎இந்தியாவில் நிலைகொண்டுள்ள இதர அணு ஆற்றல் ஆலைகளைப் போலவே, சென்னை அணுமின் நிலையமும் இந்திய அரசின் அணு ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அணுமின் கழக நிருவாகத்தின் கீழ் செயல் பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் பணிகள் 1970 ஆம் ஆண்டில் துவங்கின. சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு ஆற்றல் நிலையம் ஆகும்.  இதற்கிடையே, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது அணு உலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் 13 ஆம் தேதி வரை மின் உற்பத்தி  நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மின் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kalpakkam ,plant , Power outage at Kalpakkam nuclear plant due to maintenance
× RELATED பள்ளி மாணவர்களுக்கு வானியல் செயல்பாடுகள் குறித்து விளக்கம்