×

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

சென்னை: மத்திய அரசுக்கு எதிராக 8ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரி கட்சிகள் சார்பாக கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். மத்திய பாஜ அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச நலனுக்கு விரோதமான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இதேபோல் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளன. நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் பேராதரவு வழங்கியுள்ளன. போராட்டத்தை தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறச் செய்யும் வகையில் இடதுசாரி கட்சிகளும், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளன. 


Tags : India ,Strike ,Tamil Nadu , All India, Strike Struggle, Tamil Nadu, Pickle, Left parties
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...