×

கள்ளக்காதலியுடன் நெருங்கி பழகியதால் ஆத்திரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாய்க்கு அரிவாள் வெட்டு

* டாக்டர், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
* தப்ப முயன்ற ஆசாமி சுற்றி வளைத்து கைது

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாய் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியது. வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவி (57). ெசன்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை 8 மணி அளவில் புறநோயாளிகள் பிரிவில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த ஆசாமி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதை பார்த்த நோயாளிகளும், டாக்டர்களும் அலறியடித்து ஓடினர். இதில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். தகவலறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ பாலு ஓடிவந்து, தப்ப முயன்ற ஆசாமியை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தார். பின்னர், ரவியை மீட்டு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில், வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பிடிபட்ட ஆசாமி தண்டையார்பேட்டை பரமேஸ்வரி நகரை சேர்ந்த ஐயப்பன் (36) என்பது தெரிந்தது. மேலும், விசாரணையில், அதே மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வரும் தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகரை சேர்ந்த ராஜேஸ்வரிக்கு கணவர் இல்லை. இதனால், அதே பகுதியை சேர்ந்த ஐயப்பனுக்கும் ராஜேஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் திருவொற்றியூர் கார்கில் நகரில் தனிக்குடித்தம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும், வார்டு பாய் ரவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஐயப்பனுக்கு தெரிய வந்ததால், ரவியை கண்டித்துள்ளார். பலமுறை கண்டித்தும் இவர், ராஜேஸ்வரியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஐயப்பன், ரவியை வெட்டியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரைவருக்கு கத்திக்குத்து

வேளச்சேரி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (23). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சங்கர் (26). இருவரும் டிரைவராக பணியாற்றி வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இருவருக்கும்   வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரமடைந்த சங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆறுமுகம் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, சங்கரை தேடி வருகின்றனர்.

Tags : Ward Point ,Stanley Government Hospital Stanley Government Hospital , Wrinkle cut , Ward Point,Stanley Government Hospital
× RELATED ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் கடும் அவதி