×

‘ராகுல் அராஜகத்துக்கு துணை நிற்கிறார்’

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் மற்றும் பாஜ.வைச் சேர்ந்த தலைவரான கிரிராஜ் சிங் கூறியதாவது: முகமுடி அணிந்து பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியவர்கள் பாஜவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ்சின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. ராகுல்காந்தி அராஜகத்துக்கு துணை போகிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை ராகுல் சந்தித்து பேசுகிறார். ராகுல் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள், தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை ஆதரித்தவர்கள். நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் தேசபக்தரா? அவர் என்ன பகத்சிங்கா? இப்போது தீவிரவாதம், அராஜகம், பாசிசம் ஆகியவற்றை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Rahul , Rahul supports, anarchy
× RELATED சொல்லிட்டாங்க…