×

கவர்னர் உரைக்கு வாசன் பாராட்டு

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. குறிப்பாக, தமிழ்நாடு நாள் என்று அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டதன் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கப்பட்டிருக்கிறது. அரசு தொடர்ந்து மக்கள் நலன் காக்கவும், தமிழகத்தை முதன்மையான மாநிலமாக செயல்படுத்திடவும் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Tags : speech ,Governor ,Vasan , Vasan applauds ,Governor's speech
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...