×

தர்மபுரி அருகே உணவு குழாயில் சிக்கன் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி

நல்லம்பள்ளி: தர்மபுரி  மாவட்டம் தொப்பூர் அருகேயுள்ள உம்மியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை.  லாரி டிரைவரான இவரது மனைவி மீனாட்சி. இவர்களது மூத்த மகள் அன்னபூரணி(6).  அங்குள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறாள்a. 2வது மகள் தனுஸ்ரீ (2).  நேற்று முன்தினம் சின்னத்துரை லாரிக்கு சென்று விட்டு இரவு வீடு  திரும்பியுள்ளார்.

பின்னர், அனைவரும் சாப்பிட்டு விட்டு 9 மணியளவில்  படுத்து தூங்கியுள்ளனர். குழந்தை தனுஸ்ரீரியை தொட்டிலில்  கிடத்தியிருந்தனர். நேற்று காலை வெகு நேரமாகியும் தனுஸ்ரீயிடமிருந்து எந்த  அசைவும் இல்லை. உடனே, அருகில் சென்று பார்த்தபோது குழந்தை இறந்து கிடந்தது  தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் சிக்கன் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர்.

இதையடுத்து காலையில் இறந்த நிலையில் குழந்தை கிடந்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், இரவு சாப்பிட்ட சிக்கன் குழந்தையின் உணவு குழாயில் சிக்கியதில் இரவில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : baby ,Dharmapuri , baby kills
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...