×

முதல்வர் பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: முதல்வர் பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரையின் 56 பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன், சொல்வதற்கு உறுப்படியாக ஒன்றுமில்லை. இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை, நல்ல நகைச்சுவை உரை என்றும் கூறியுள்ளார். பேரவையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்திருந்தார். 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை எனவும் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று துவங்கியது. கவர்னர் உரையை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

Tags : governor ,Palanisamy ,Stalin ,Dwight , Stalin
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...