சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக அமைச்சர்கள் குழு முதற்கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சர் சண்முகம், உயர்கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.