சென்னை: நித்தியானந்தா சீடர் முருகானந்தத்தை ஆஜர்படுத்த கோரி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. சீடர் முருகானந்தத்தின் தாயார் சங்கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சென்றதாக சீடர் முருகானந்தம் ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.