டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சோலிமானியின் உடல் தலைநகர் டெஹ்ரான் கொண்டுவரப்பட்டது. ஈராக் தலைநகர் டெஹ்ரான் பாக்தாக் விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சோலிமானி உயிரிழந்துள்ளார். ஹஷீத் கிளர்ச்சியாளர்கள் குழுவின் துணைத் தலைவர் மஹாதி உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மெகாபாத் விமான நிலையம் வந்தடைந்த அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று அஞ்சலி செலுத்தினர். சோலிமானியுடன் கொல்லப்பட்ட ராணுவ உயர் அதிகாரி அப்பு மகிதியின் உடலும் அதிகாலை டெஹ்ரான் கொண்டுவரப்பட்டது. இருவரது உடலையும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் ராணுவ வீரர்கள் தூக்கி சென்றனர். இந்நிலையில் காசிம் சோலிமானியின் மறைவுக்கு ஈரான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சோலிமானியின் உடல் டெக்ரானில் இருந்து அவரது சொந்த ஊரான கெர்மான் கொண்டு செல்லப்பட்டது. இறுதி அஞ்சலிக்கு பின் காசிம் சோலிமானியின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.