டெல்லி: மாணவர்களின் குரல் ஒவ்வொரு நாளும் ஒடுக்கபடுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டணம் தெரிவித்துள்ளார். மோடி அரசின் ஒத்துழைப்புடன் இந்திய இளைஞர்கள் தாக்கப்பட்டு உள்ளதாக சோனியா காந்தி அறிக்கை அளித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் நேற்று தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை அனுப்பியுள்ளார்.