×

பாஜவை சேர்ந்த 350 பேர் மீது வழக்கு

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூரியில் குடியிருப்பு பகுதி அருகே பாஜ சார்பில் கடந்த வெள்ளியன்று போராட்டம் நடந்தது. அரசு அதிகாரிகள், பாஜ தொண்டர்கள் மீது அரசியல் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுப்பதாக இதில் குற்றம்சாட்டப்பட்டது. இதில் பாஜ பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, ‘‘எங்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தற்போது இங்கு இருக்கின்றனர். இல்லையென்றால் இந்தூர் இன்று தீ வைத்து எரிக்கப்படும்,” என முழக்கமிட்டார். இது தொடர்பாக விஜய் வர்கியா உட்பட பாஜ.வை சேர்ந்த 350 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Baja , Baja, 350 people, suit
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...