×

காஞ்சி.-உத்திரமேரூர் சாலையில் செடிகளால் அடிக்கடி விபத்து: அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஓரிக்கை பகுதியில் பாலாற்றுப்பாலம் உள்ளது. குருவிமலை, பல்லாவரம், களக்காட்டூர், வேடல், மாகரல் மற்றும் ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மேற்கண்ட சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களும் சென்று வருகின்றன.

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் இணைப்பு சாலை வளைவில் இருபுறமும்  முட்செடிகள் வளர்ந்துள்ளதால் உத்திரமேரூரில் இருந்து வாகனங்களும் எதிரே வரும் வாகனங்களும் தெரியாமல் மோதி விபத்து நடைபெறுகிறது. எனவே, ஓரிக்கை பாலாற்று பாலம் அருகே சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள முள்செடிகளை அப்புறப்படுத்தி, மின் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : accidents ,plants ,Motorists ,road ,Kanchi.-Uthramerur Road ,Traveling Motorists , Kanchi, Utramerur, accident, motorists
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...