×

விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் திரண்ட சுற்றுலா பயணிகள்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று காலை முதலேயே தர்மபுரி மற்றும் உள்ளுர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன்களில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
 
அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்று காவிரியின் அழகை ரசித்தும் மகிழ்ச்சியடைந்தனர். ஒகேனக்கலில் நீர்வரத்து 2500 கனஅடியாக உள்ள நிலையில், ஆற்றில் ஆங்காங்கே மக்கள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் அதிக வருவாய் கிடைத்தது.


Tags : Okenakal ,holiday season , Holidays, Okanakkal, tourists
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 62.49 அடியாக சரிவு