டெல்லி: பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சீக்கியர்களை கட்டாய மதமாற்றம் செய்பவர்களையும் சீக்கிய இளம்பெண்களை கட்டாயத் திருமணம் செய்பவரையும் தடுக்க வேண்டும். மேலும் சீக்கியர்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரவும் பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.