பெஷாவர் : பாகிஸ்தானில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின், நங்கனா சாஹிப்பில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்வாரா மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், அங்கு வசிக்கும் சீக்கியர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.