×

சென்னை திருமுல்லைவாயலில் 80 சவரன் நகை கொள்ளை

சென்னை : சென்னை திருமுல்லைவாயலில் விஜயந்திமாலாபாய் என்பவர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை அடித்துள்ளனர். விஜயந்திமாலாபாய் பெங்களூரு சென்றிருந்த நிலையில் மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : 80 shaving, jewelery ,robbery
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...