சென்னை: தென் மண்டல அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் டேபிள் டென்னிஸ் போட்டி விஜயவாடாவில் நடந்தது. எஸ்ஆர்எம்ஐஎஸ்டி நிறுவனம் இறுதி போட்டியில் தெலங்கானாவின் உஸ் மானியா பல்கலைக்கழகத்தை 3-2 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.
* தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டி ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது. இதில் எஸ்ஆர்எம்ஐஎஸ்டி முதலிடத்தை பிடித்தது. அண்ணா பல்கலைக்கழகம் 2வது இடமும், சென்னை
பல்கலைக்கழகம் 3வது இடமும் பிடித்தன. முதல் 3 இடங்கள் பிடித்த இந்த அணிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) சார்பில் முறையே 10,000, 7,500, 5,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.