×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுற்றுலா: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு

சென்னை: சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுற்றுலாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:பொங்கல் விழாவினை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு வீரவிளையாட்டுப் போட்டியை காணும் பொங்கல் அன்று நேரில் கண்டு ரசிப்பதற்கு மதுரை அருகே உள்ள அலங்காநல்லூருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் பயன்படுத்தப்படும் சொகுசு பேருந்து இயக்கப்படும். இது 16ம் தேதி இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5.30 மணிக்கு மதுரை சென்றடையும். ஓட்டல் தமிழ்நாடு மதுரையில் காலை உணவு வழங்கப்படும்.

அதன்பின், 17ம் தேதி காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் சென்றடையும். காளைகளின் வீரவிளையாட்டை பார்வையிட்ட பின்னர் இரவு மதுரையில் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் பின்பு காணும் பொங்கல் மறுநாள் 18ம் தேதி காலையில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர்கோவில் ஆகிய இடங்களுக்கு வழிகாட்டி உதவியுடன் அழைத்து செல்லப்படுவார்கள். அன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு 19ம் தேதி விடியற்காலை சென்னை வந்தடைவார்கள்.  இச்சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு 4300 மற்றும் சிறியவர்களுக்கு (6-12 வயது) 3450 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதியுள்ள அறை வேண்டுவோருக்கு ₹4500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு, தொலைபேசி: 04425333333, 25333444, 25333857, 25333850-54, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111, இணையதள முகவரி: www.tamilnadutourism.org, இணையதள முன்பதிவு: www.ttdconline.com, கைப்பேசி முன்பதிவு: www.mttdonline.com முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Tourism Development Corporation Announces , Alankanallur Jallikattu Tourism, Tamil Nadu Tourism Development Corporation
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...