×

தேர்தல் முடிவு ஆளும் கட்சியின் சரிவை காட்டுகிறது: திருமாவளவன் பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சரிவை காட்டுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்யவாணி முத்துநகர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்களை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகாரிகள் நடக்கிறார்கள்.  இதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட முடிவு செய்தோம். இந்தநிலையில், அதிகாரிகள் இந்த பிரச்னையில் கவனம் செலுத்துவதாக கூறியதையடுத்து தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். ஆனால், தொடர்ந்து குடிசைகளை அகற்ற டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். டோக்கன் வழங்குவதில் உள்ள ஊழல், முறைகேடுகளை களைய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சரிவையே காட்டுகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியை விட கூடுதலான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளது. குடியுரிமை திருத்தசட்டத்திற்கு அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததன் மூலம் இன்றைக்கு நாட்டின் மிகப்பெரிய கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பின் மூலம் மக்களின் எண்ணம் வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : party ,Thirumavalavan , Election results, ruling party, Thirumavalavan
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...