×

மீடூ புகார் கொடுத்த நடிகையின் வழக்கறிஞர் மீது வழக்கு

மும்பை: பெண்ணை வம்பிழுத்து சீண்டியதால். மீடூ புகார் கூறிய நடிகை தனுஸ்ரீதத்தாவின் வக்கீல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, தமிழில் விஷால் ஜோடியாக ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது மீடூ விவகாரத்தில் பாலியல் புகார் கூறிய அவர், உடனே நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார், ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி கைவிட்டு விட்டனர்.  எனினும், ‘’போலீசார் ஒருதலைபட்சமாக நடந்துள்ளனர். இந்த பிரச்னையை மீண்டும் எழுப்பி, உரிய நீதி கிடைக்கும் வரை போராடுவேன்’’ என்று தனு தத்தா ஆவேசத்துடன் தெரிவித்தார். அவருக்காக வழக்கறிஞர் நிதின் சத்புத் ஆஜராகி வாதாடினார். தற்போது அந்த வழக்கறிஞர் மீது ஒரு பெண் மும்பை கெர்வாடி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘’47 வயது பெண் ஒருவர் நிதின் சத்புத் மீது புகார் அளித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் குழந்தைகளுக்கான பூங்கா அமைப்பது பற்றிய விவகாரத்தில் நிதினுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு நிதின் அந்த பெண்ணை செல்போனில் அழைத்து, தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். இதையடுத்து மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக ஆணையத்தில் நிதினை அழைத்து உயர் அதிகாரிகள் விசாரித்தனர். பிறகு வெளியில் வந்த நிதின், புகார் அளித்த பெண்ணின் அருகில் வந்து தகாத வார்த்தைகளில் திட்டினாராம். இதையடுத்து அந்த பெண் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார்.  இதுதொடர்பாக வழக்கறிஞர் நிதின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்’’ என்று சொல்லப்பட்டது. மீடூ விவகாரத்தில் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் மீது ஒரு பெண் புகார் அளித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Tags : Meadow ,actress ,lawyer , Me to Complainant, Actress, Advocate
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...