×

குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பதிவிட்ட அசாம் வாலிபர் கைது

கோவை: செல்போனில் 18 வயதுக்கும் குறைவான சிறார்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்வதும், பரப்புவதும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே திருச்சியில் ஒருவரும், சென்னையில் முதியவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பொள்ளாச்சியில் இருந்து தனது பேஸ்புக் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை ஒரு வாலிபர் பதிவிறக்கம் செய்ததை சமூக ஊடகப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர், இதில் பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் உள்ள டைல்ஸ் கடையில் வேலை பார்க்கும் அசாமை சேர்ந்த ரென்டா பாசுமாடரி(23) என்பதும், செல்போனில் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து, முகநூலில் நண்பர்களுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் அவரை கைது செய்தனர். மேலும், குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போன் மற்றும் லேப்டாப்பில் வைத்திருப்போர் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று கோவை மாவட்ட எஸ்பி. சுஜித்குமார் எச்சரித்துள்ளார்.

Tags : Assam , Arrested, Assam Youth
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...