×

ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் மீது கையெறி குண்டு வீசி தாக்குல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகரின் கதாரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று மதியம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினர். அந்த குண்டு வெடித்துச் சிதறியதில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன. அப்பகுதியை பாதுகாப்பு படையினர் உடனடியாக சுற்றி வளைத்தனர். இந்த தாக்குதலில் வீரர்கள் யாரும் காயமடைந்தது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. இதனிடையே, தெற்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ஹாஜின் பகுதியில் லஷ்கர் தீவிரவாதி நிஷார் அகமது கைது செய்யப்பட்டார்.


Tags : Grenade attack ,CRPF ,Srinagar CRPF ,attack ,Grenade ,Srinagar , Srinagar, CRPF, Grenade, Throw, Attack
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்