சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேற்று கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.