சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக 48 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ததையடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் அரசு பிளீடர்களாக ஆஜராகிவந்த மனோகரன் உள்ளிட்ட 8 பேர் சிறப்பு அரசு பிளீடர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் எம்.பெருமாள், கே.ஜே.செல்வகுமார் உள்ளிட்ட 24 பேர் கூடுதல் அரசு பிளீடர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வழக்குகள் அதிகமாகி வருவதால் மேலும் பல அரசு வக்கீல்களை நியமிக்க அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயன் அரசுக்கு பரிந்துரைத்தார். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் அரசுக்கு பரிந்துரைத்ததன் அடிப்படையில் 48 அரசு வக்கீல்களை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.