சென்னை: சிறையில் உள்ள ஆந்திர மீனவர்களை 6-ம் தேதி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 17 மாதங்களாக சிரியாவில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 20 பேரை வாகா எல்லையில் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2018 நவம்பர் மாதம் குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்த ஆந்திர மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் சிறைபிடிக்கப்பட்டனர்.