சென்னை: நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் குற்றச்செயலை தடுக்க முயன்றபோது ஆசிட் வீச்சில் காயமடைந்த காவலர்கள் இருவருக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த பொதுமக்கள் 13 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.