சென்னையில் காலமான முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அண்ணா நகரில் உள்ள இல்லத்துக்குச் சென்று பி.ஹெச். பாண்டியன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல் அமைச்சருடன் தமிழக அமைச்சர்கள் பலர் சென்று அஞ்சலி செலுத்தினர்.