×

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் டன் கணக்கில் சிக்கிய பேச்சாளை

ராமேஸ்வரம்: பாம்பன் விசைப்படகு மீனவர்கள் டன் கணக்கில் பேச்சாளை மீன்களுடன் நேற்று கரை திரும்பினர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இரவு முழுவதும் பிடித்ததில், அதிகளவில் பேச்சாளை மீன்கள் சிக்கின. டன் கணக்கில் பிடிபட்ட பேச்சாளை மீன்களுடன் அனைத்து படகுகளும் நேற்று காலை பாம்பன் கடற்கரைக்கு திரும்பின.

படகுகளில் இருந்த மீன்களை, மீனவர்கள் பிளாஸ்டிக் கூடைகளில் அள்ளிக்கொண்டு சிறிய படகு மூலம் கரையை வந்தடைந்தனர். தொடர்ந்து கடற்கரையில் கூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மீன்களை, வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு விலைக்கு வாங்கி சென்றனர். நீண்ட நாட்களுக்கு பின் அதிகளவில் பேச்சாளை மீன்கள் சிக்கியதால், கரை திரும்பிய மீனவர்களுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.


Tags : Pompon fisherman fisherman ,Pamban ,fisherman fisherman , Pamban fisherman ,fisherman's, net, worth
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...