டெல்லி: உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் பல்கலைக்கழக துணை வேந்தராக பதவி வகித்த ரத்தன் லால் ஹங்குலுா, பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி மாளிகை நேற்று ஏற்றுக்கொண்டது.