×

தோல்வி என நினைத்து தூங்கியவருக்கு வெற்றி சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள்

பெருந்துறை: ஈரோட்டில், தோல்வி என நினைத்து தூங்கியவருக்கு அதிகாரிகள் வெற்றி சான்றிதழ் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவீரசங்கிலி 6-வது வார்டு தேர்தலில் சுயேட்சையாக  மணிகண்டன் மற்றும் குமாரசாமி  ஆகிய இருவர் மட்டுமே போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கையின்போது இருவரும் தலா 150 வாக்குகளை பெற்றனர்.
இதனால், தான் தோற்று விட்டதாக  நினைத்த குமாரசாமி வீட்டுக்கு சென்றுவிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் இருவரும் சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியை தீர்மானிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்த குலுக்கலில் குமாரசாமி வெற்றி பெற்றார். ஆனால், குமாரசாமி வாக்கு எண்ணும் மையத்தில் இல்லாததால் அவரை தேடி வீட்டுக்கு சென்றனர். அங்கு குமாரசாமி தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு அவரை அழைத்து வந்து குலுக்கல் முறையில் வெற்றி பெற்றதை கூறி அதிகாரிகள் குமாரசாமி கையில் வெற்றி சான்றிதழை ஒப்படைத்தனர். இதனால் குமாரசாமி அதிர்ச்சி கலந்த சந்ேதாஷமடையந்தார்.


Tags : victory ,sleeping victim , Officials,certified victory , sleeping victim
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...