ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் குமரேசன். இவர் கொண்டம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 12-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டார். அதேபோல், மூன்றம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவியான இவரது மனைவி உஷாராணி, மிட்டப்பள்ளி மூன்றம்பட்டி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வார்டு 11ல் போட்டியிட்டார். கணவன்-மனைவி இருவரும் வெற்றி பெற்று கவுன்சிலர் பதவியை பிடித்தனர்.
இதேபோல், குமரிமாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் குலசேகரபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக பிரமுகரான சுடலையாண்டி 838 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.குலசேகரபுரம் வடக்குத் தாமரைகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அவரது மனைவி சண்முகவடிவும் வெற்றி பெற்றார். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சொர்ணபிரியா போட்டியிட்டார். இதில் சொர்ணபிரியா 1954 ஓட்டுகள் ெபற்று வெற்றி பெற்றார். சொர்ணபிரியாவின் கணவர் வக்கீல் ராமலிங்கம் என்ற துரை இந்த கிராம பஞ்சாயத்து 3வது வார்டுக்கு போட்டியிட்டு வெற்றி ெபற்றார்.