×

வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்.எஸ்.ஐ பரிதாப சாவு

ஜெயங்கொண்டம்:  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவுடைநம்பி (56). ஜெயங்கொண்டம் எஸ்எஸ்ஐ. இவர், நேற்றுமுன்தினம் ஆண்டிமடம் காவல் நிலையத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் தனது மொபட்டில் வரும்போது அப்பகுதியில் யாரும் இல்லாத இடத்தில் மொபட்டுடன் விழுந்து இறந்து  கிடந்தார்.  இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : SSI ,death ,polling station ,SI , SI mourns death ,polling station
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...