×

தமிழக உள்ளாட்சி தேர்தலில் மக்களின் முடிவை ஏற்கிறோம் : ஓபிஎஸ் பேட்டி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.20 மணி விமானத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை புறப்பட்டு சென்றார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. மக்களின் முடிவு எதுவாக இருந்தாலும், அதிமுக சார்பில் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்தவர்களுக்கு நன்றி என ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டு, நிருபர்களின் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

Tags : OPS ,interview ,elections ,Tamil Nadu , We accept ,people, Tamil Nadu local elections, OPS interview
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி