×

பெண்ணை தாக்கி செயின் பறிப்பு

பல்லாவரம்: அனகாபுத்தூர், விநாயகா நகரை சேர்ந்தவர் அருணா (50). நேற்று முன்தினம் அருணா, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு, தனது மொபட்டில் சென்றார். அங்கு பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்மநபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அருணாவை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்த புகாரின்படி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.



Tags : Woman, Chain flush
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...