×

உத்தர பிரதேசத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு பிரியங்கா வாழ்த்து கடிதம்

லக்னோ; அரசியலமைப்பு முன்னுரையுடன் உத்தர பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு பிரியங்கா காந்தி புத்தாண்டு வாழ்த்து கடிதம் அனுப்பி வருகிறார்.  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறார். இதை வலியுறுத்தும் விதமாக அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள முன்னுரையை  போராட்டத்தின்போது வாசித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு அவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார்.

அவரது கையெழுத்து இடம் பெற்றுள்ள இந்த கடிதம், எழுத்தாளர்கள், கவிஞர்கள், செய்தியாளர்கள், சமூக சேவகர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு கூறுகையில், ‘‘மத்திய பாஜ ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரியங்கா காந்தி இந்த கடிதத்தை எழுதி வருகிறார்,’ என்றார்.

Tags : millions ,Priyanka ,Uttar Pradesh , Uttar Pradesh, Priyanka, letter of congratulation
× RELATED பிரதமர் மோடியின் நோக்கமே...