×

அருப்புக்கோட்டை அருகே இரு தரப்பு மோதல் காரணமாக வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் இரு தரப்பு மோதல் காரணமாக வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கட்டப்பொம்மன் சிலைக்கு செலுத்திவிட்டு திரும்பியவர்கள் மீது ஒருதரப்பினர் தாக்குதல், கல்வீச்சு நடத்தினர். இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழலால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பு மோதலால் நிலவும் பதற்றம் காரணமாக அதிரடிப்படை, வஜ்ரா வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. போதிய போலீசார் இல்லாததால் மோதலை தவிர்க்க வானத்தை நோக்கி இருமுறை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Tags : sky ,Aruppukkottai ,collision , Fire
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...