சென்னை: ஜனவரி 8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 8ஆம் தேதி தேசிய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக்கூடாது என்று தலைமைச்செயலர் தெரிவித்துள்ளார்.