×

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் நன்றி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட சலசலப்பை எதிர்கொண்டு ஆட்சியை நிலை நிறுத்தி உள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை அதிமுக கைப்பற்றி உள்ளது. 27 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தமது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கிறது. தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் அதிமுக மீண்டும் பெற்று வருவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Tags : OPS ,Edappadi Palanisamy ,elections ,AIADMK ,election , Local election
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி