நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சிலாக்காட்டில் பிரபல ரவுடி தனபால்(36) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். முன்விரோதம் காரணமாக தனபால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 2018ல் நிதிநிறுவன அதிபர் மற்றும் ரவுடி வளத்தி மோகனை கொலை செய்ததாக தனபால் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.