×

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத உள்ளாட்சி தேர்தல் : வந்தவாசி அருகே 2 மனைவிகளையும் ஊராட்சித் தலைவராக்கிய முன்னாள் தலைவர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் 2 மனைவிகள் 2 வெவவேறு ஊராட்சி மன்றங்களின் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளனர். வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள வழூர்- அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். முன்னாள் வழூர்- அகரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். இவர் தமது 2 மாணவிகளோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் முதல் மனைவியான செல்வியை வழூர்- அகரம் கிராமத் தலைவருக்கும் இன்னொரு மனைவியான காஞ்சனாவை கோவில் குப்பம் கிராமத் தலைவருக்கும் போட்டியிட வைத்தார். தற்போது இருவரும் வெற்றி பெற்று கணவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர். வழூர்- அகரம் மற்றும் கோவில் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட 2 பொண்டாட்டிக்காரரின் மனைவிகள் பெற்ற வெற்றிகள் அந்த இரு ஊர் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Tags : government ,election ,Vandavasi ,panchayat leader ,wives ,Former , Thiruvannamalai, Vandavasi, Former Chairman, Independent, Panchayat
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...