×

தோவாளை ஒன்றியத்தில் 73 வயது தடகள வீராங்கனை கவுன்சிலர் ஆனார்

பூதப்பாண்டி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் தடிக்காரன்கோணம், அருமநல்லூர், தோவாளை உள்ளிட்ட மொத்தம் 16 ஊராட்சிகள் உள்ளன. இங்கு பதிவான வாக்குகள் அனைத்தும் பூதப்பாண்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன. தோவாளை ஊராட்சி ஒன்றிய 1-வது வார்டில் மேரி ஜாய் என்ற சுயேட்சை வேட்பாளர் 963 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு வயது 73. தடிக்காரன்கோணம் அருகே உள்ள குட்டி பொத்தையை சேர்ந்தவர் ஆவார். முதியோர் தடகள போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தனது 73 வது வயதில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு மேரி ஜாய் வெற்றி பெற்றுள்ளார். 1 வது வார்டில் மலை கிராமங்கள் அதிகம் உள்ளன. இப்போது தான் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது.  

ஆனால் மருத்துவமனை இல்லாத காலத்திலும் மேரி ஜாய் மலை கிராம மக்களுக்கு பல்வேறு மருத்துவ உதவிகளை செய்துள்ளார். இவருக்கு நாட்டு வைத்திய முறைகள் தெரியும் என்பதால், எந்த நேரத்திலும் அந்த பகுதி மக்களுக்கு சென்று உதவிகள் செய்து வந்தார்.  இதன் அடிப்படையில் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


Tags : athlete ,councilwoman ,councilor ,Toewale Union , Toewale Union, 73-year-old athlete, councilor
× RELATED புதுகை நகராட்சி 9வது வார்டில் குப்பை...