×

1.5 கோடி மாணவர்களுக்கு மம்தா புத்தாண்டு வாழ்த்து

கொல்கத்தா: புத்தாண்டு 2020ம் ஆண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பள்ளி மாணவர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலக லெட்டர் பேடில் மம்தா கையெழுத்திட்டு, மாநிலத்தில் இயங்கும்  அனைத்து பள்ளிகள், முஸ்லிம் கல்வி சாலைகளில் பயிலும் 1.5 கோடி மாணவர்களுக்கும் தனித்தனியாக  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. `அன்புள்ள’ என தொடங்கி எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், `புத்தாண்டு பிறந்துள்ளதை தொடர்ந்து தங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். நாட்டின் எதிர்காலம் நீங்கள்தான். இந்த சமூகத்தை கட்டமைக்கும் நிபுணரான நீங்கள், சிறந்த மனிதராக வாழ நன்றாக கல்வி கற்க வேண்டும். இதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Mamata , 1.5 crores, Student, Mamta, Happy New Year
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்