×

தைலாபுரத்தில் வரும் 5ம் தேதி பாமக துணை அமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

சென்னை: பாமக துணை அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் வரும் 5ம் தேதி தைலாபுரத்தில் நடைபெற உள்ளதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை: பாமக மற்றும் பாட்டாளி இளைஞர் சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்துள்ள மாங்கனி அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். துணை அமைப்புகளில் பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், பாட்டாளி மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயலாளர்கள், மாநில துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பான முடிவுகளை செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.

Tags : Meeting ,executives ,TMC Executives ,TMC , Thailapuram, 5th, Bamaka, Subsidiary, Executive Meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...