×

வெற்றி அறிவிப்பதில் தாமதம் மறியல் செய்தவர்கள் மீது போலீசார் தடியடி: திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம்: வெற்றி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதையடுத்து திருமங்கலத்தில் மறியல் நடந்தது. தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே காண்டை கிராமத்தில் நடந்த ஊராட்சி தேர்தலில் தவமணி, தன்னை எதிர்த்து நின்ற முனீஸ்வரியை விட 13 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இவரது வெற்றியை அறிவிக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக கூறி வேட்பாளர் தவமணியும், அவரது கணவர் முருகனும் குற்றம் சாட்டினர்.

நேற்று மாலை 5.30 மணி வரையில் முடிவுகள் அறிவிக்காததை கண்டித்து தவமணி அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான திருமங்கலம் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - விருதுநகர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலையவில்லை. டிஎஸ்பி அருண் உத்தரவின்படி போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு கூடியிருந்த கூட்டத்தினர் நான்கு பக்கமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : victory ,policemen , Victory, delay, picket, police thadadi, thirumangalam, parabaraparam
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...