எடப்பாடி: எடப்பாடியில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் முடிவுகளை அறிவிக்கவில்லை என கூறி திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.