×

மாமல்லபுரத்தில் நினைவு சின்னங்கள் உள்ள பகுதிகளில் பராமரிப்பு, துப்புரவு பணிகள் மேற்கொள்ள எவ்வளவு நிதி ஒதுக்கீடு : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சென்னை,: மாமல்லபுரத்தில் நினைவு சின்னங்கள் உள்ள பகுதிகளில் பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகள் மேற்கொள்ள எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மாமல்லபுரத்தை பாதுக்காக்க கோரிய வழக்கு

சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பினாா். அந்த கடிதத்தில், மாமல்லபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமாக பாதுகாக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.கடற்கரை கோயில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் கலாசாரங்களை சிதைக்கும் வகையிலான கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. குப்பைகளை கொட்டினால் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த  கடிதத்தை அடிப்படையில் தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள், குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு

இந்த வழக்கு  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு ஒன்று செய்யப்பட்டது. அந்த மனுவில், புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும்,பழைய கட்டிடங்களை புணரமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வியாபாரிகள் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. துப்புறவு பணிக்காக தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.அதிக எண்ணிக்கை கொண்ட 7  கழிவறை மற்றும் 30  மறு சுழற்சி  குப்பைகளை போடும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.  திற்ந்த வெளி கழிவுநீர் வெளியேற்ற திட்டத்தை மாற்றம் செய்து 8 கிலோ மீட்டர் துரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.12 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி தாக்கல் செய்த பதில் மனு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய செயலாளர் ராம நாதன் தாக்கல் செய்த பதில் மனுவில்,290 நிரந்தர ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர்.மீண்டும் ஆக்கிரமிப்புகளை தடுக்க காவல்துறை உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பார்க்கிங் வசதி இல்லாததால் ,மாமல்லபுரத்திற்கு வெளியே பார்க்கிங் வசதி செய்ய தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறைக்கு உத்தரவு

இதனிடையே டிஜிபி தாக்கல் செய்த பதில் மனுவில் மாமல்லபுரத்திற்கு வரும் அயல்நாட்டினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தனி காவல் பிரிவு உருவாக்கப்பட்டு,ஆங்கில புலமை பெற்ற போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளாதாக  குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த அங்கீகரிக்கப்பட்ட எத்தனை தனியார் தொண்டு நிறுவனங்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்? தன்னார்வலர்கள் எத்தனை பேர் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்? மாமல்லபுரத்தில் நினைவு சின்னங்கள் உள்ள பகுதிகளில்  பாரமரிப்பு பணிகளை மேற்கொள்ள பேருராட்சி நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறித்த விவரங்களை மத்திய, மாநில அரசுகள் ஜனவரி 22 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்...

Tags : Central ,cleaning ,Governments ,State ,Mamallapuram ,State Governments , Mamallapuram, High Court, Sanitation Works, Maintenance, Monuments, Archeology
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...