×

சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை எரிக்க முயற்சி: 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கோவை:  கோவை மாவட்டம் சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே எரிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  காடம்பாடி பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே ஆட்டோ ஒன்றில் வந்த நபர் காலாவதியான ஆங்கில மருந்துகளை கொட்டி எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.  அவரைப்பிடித்து பொதுமக்கள் விசாரித்தபோது பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ராஜா சிங் ஆகியோருக்கு சொந்தமான மருந்தகத்திலிருந்து  அவற்றை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.   இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Sulur ,Attempt , Sulur, expiration, English medicine, case record
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி