கோவை: கோவை அரசூர் ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.12 வாக்குப்பெட்டிகளில் முத்திரையிடப்பட்ட சாக்கு இல்லாததால் வாக்கு எண்ண எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி முகவர்களும் வாக்குகளை எண்ண கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.