×

மெக்சிகோ சிறைச்சாலையில் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்ட கைதிகளிடையே மோதல்: 16 பேர் பலி

மெக்சிகோ:  ஸகாடகாஸ் மாகாணத்தில் உள்ள மெக்சிகோ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே கால்பந்து விளையாடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக சிறை நிர்வாகிகள்  தெரிவித்துள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கைதிகள் குழுவாக இணைந்து கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.  அப்போது சில கைதிகள் துப்பாக்கியாளும் சுட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து மோதலை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் ஆயுதங்களுடன் சிறைக்குள் நுழைந்தனர்.  அதற்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர்  பரிதாபமாக உயிரிழந்ததாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.  இந்த சண்டை குறித்தும் சிறைக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எப்படி கிடைத்தனர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று  அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : prisoners ,Conflict ,football game ,prison ,Mexico ,Clash , Mexico, Prison, Football, Prisoners, Conflict, Kills
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...